ஒக்கிப் புயலில் சிக்கிய கன்னியாகுமரி மாவட்ட மீனவர்களைக் காப்பாற்றும் விஷயத்தில் தவறிய மத்திய, மாநில அரசுகள் கண்டித்து வரும் 16-ம் தேதி போராட்டம் நடத்தப்படும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
ஊழலை ஒழிக்க லோக் ஆயுக்தா மற்றும் சேவை உரிமை மசோதாக்களை சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் நிறைவேற்ற வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவுறுத்தியுள்ளார்.
பைனான்சியர் ஜி.என்.அன்புச்செழியனிடம் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத காரணத்தாலேயே, நடிகர் சசிகுமாரின் உறவினர் அசோக்குமார், தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை கொடுங்கையூரில் மின்சாரம் தாக்கி இரு சிறுமிகள் உயிரிழந்த நிலையில், அதேபோல மின்சாரம் தாக்கி மேலும் ஒருவர் சாவு இறந்துள்ளதால் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கடும் கண்டனத்தை தமிழகரசுக்கு தெரிவித்துள்ளார்.
அதைக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-
சென்னை கொடுங்கையூரில் மின்சாரம் தாக்கி இரு சிறுமிகள் உயிரிழந்ததால் ஏற்பட்ட அதிர்ச்சியும், துயரமும் விலகும் முன்பே மேலும் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்திருக்கிறார். மழை மற்றும் மழை சார்ந்த விபத்துகளிலிருந்து பொதுமக்களைக் காப்பாற்ற தமிழக அரசு தவறியது கண்டிக்கத்தக்கதாகும்.
தமிழ்நாட்டை உலுக்கிய குட்கா ஊழல் தொடர்பாக புதிய ஆதாரங்கள் வெளியாகியுள்ளன. எனவே இது தொடர்பான விசாரணையை உடனடியாக சிபிஐ மேற்கொள்ள வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
அதைக்குறித்து அவர் கூறியதாவது:-
தமிழ்நாட்டை உலுக்கிய குட்கா ஊழல் தொடர்பாக புதிய ஆதாரங்கள் வெளியாகியுள்ளன. தமிழகத்தில் குட்கா உற்பத்தி செய்யப்பட்டதை உறுதி செய்யும் வகையில் எம்.டி.எம் என்ற குட்கா நிறுவனம் ரூ.9 கோடி கலால் வரி செலுத்தியிருப்பதாக ஜி.எஸ்.டி. புலனாய்வுப் பிரிவு தெரிவித்திருக்கிறது. ஆனால், மறுபுறம் குட்கா ஊழல் குறித்த விசாரணையை கையூட்டு தடுப்புப் பிரிவு முடக்குவது கண்டிக்கத்தக்கது.
தமிழ்நாட்டில் பி.எட். எனப்படும் இளநிலை கல்வியியல் படிப்பில் இருந்து தமிழ் மொழியை நீக்கியது கண்டிக்கத்தக்கது என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
அதைக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-
அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைப்பதற்காக தமிழக அரசு ரூ.10 கோடி நிதி ஒதுக்கியிருக்கிறது. உலக அளவில் தமிழை வளர்ப்பதற்காக இத்தகைய நடவடிக்கையை மேற்கொண்டிருக்கும் தமிழக அரசு, அதேநேரத்தில் தமிழ்நாட்டில் கல்வி சார்ந்த விஷயங்களில் தமிழை புறக்கணிக்கும் செயலில் ஈடுபட்டிருக்கிறது. தமிழக அரசின் இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது.
வீண் செலவு மற்றும் கட் - அவுட்களால் பொது மக்கள் அவதி படுவதால் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாக்களை ரத்து செய்ய வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
அதைக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-
தமிழ்நாடு மிக மோசமான காலக் கட்டத்தைக் கடந்து கொண்டிருக்கிறது. ரோம் நகரம் தீப்பிடித்து எரிந்த போது நீரோ மன்னன் பிடில் வாசித்துக் கொண்டிருந்ததைப் போன்று தமிழ்நாட்டில் ஏராளமான பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் இருக்கும் நிலையில் அவற்றைத் தீர்க்க வேண்டிய ஆட்சியாளர்கள் மக்களின் வரிப் பணத்தில் தங்களின் புகழ்பாடும் நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டிருப்பது கண்டிக்கத்தக்கது.
தமிழ்நாட்டில் டெங்குக் காய்ச்சல் மற்றும் பிற மர்மக் காய்ச்சல்களை கட்டுப்படுத்துவதிலும், அவற்றால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுப்பதிலும் தமிழக அரசு படுதோல்வி அடைந்துள்ளது என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
அதைக்குறித்து அவர் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் டெங்குக் காய்ச்சல் மற்றும் பிற மர்மக் காய்ச்சல்களை கட்டுப்படுத்துவதிலும், அவற்றால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுப்பதிலும் தமிழக அரசு படுதோல்வி அடைந்துள்ளது. டெங்குக் காய்ச்சலை கட்டுப்படுத்துவதில் தமிழக அரசின் தோல்வி வெளிப்படையாக தெரிகிறது.
தமிழ்நாட்டில் உயிருடன் இருப்பவர்களுக்கு கட்-அவுட், பதாகை வைக்க தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டிருக்கிறது. ஆனால் தமிழக அமைச்சர்கள் அதுகுறித்த விதிகளை மீறப்பட்டிருக்கின்றன. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
அதைக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-
15% என்எல்சி பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்ய மத்திய அரசு துடிப்பதாகவும், அப்படி செய்தால் மக்களைத் திரட்டி மாபெரும் போராட்டத்தை எனது தலைமையில் பாட்டாளி மக்கள் கட்சி நடத்தும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் எச்சரித்து உள்ளார்.
அதைக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-
நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுப்பதற்காக வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு குழந்தைகள் உள்ளிட்ட 4 பேர் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ள முயன்றது அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. தீக்காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் பாளையங்கோட்டை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள அவர்கள் அனைவரும் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்.
டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும் மது வகைகளில் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடிய அமிலங்கள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
சென்னை கோயம்பேடு பகுதியில் செயல்பட்டு வந்த மதுக்கடை ஒன்றில் விற்பனை செய்யப்பட்ட ரம் வகை மதுவை வாங்கிய வாடிக்கையாளர் ஒருவர் அதன் தரத்தை ஆய்வு செய்யக்கோரி உணவுப் பாதுகாப்புத்துறையிடம் ஒப்படைத்திருக்கிறார். அத்துறையின் அதிகாரிகள் அந்த மதுப்புட்டியை தஞ்சாவூரில் உள்ள உணவுப் பொருட்கள் ஆய்வகத்திற்கு அனுப்பி ஆய்வு செய்துள்ளனர்.
பேரறிவாளனுக்கு விடுதலை அல்லது நீண்டகால பரோல் வழங்க வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் முகநூல் பக்கத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இராஜிவ் கொலை வழக்கில் தவறு செய்யாமல் தண்டிக்கப்பட்ட பேரறிவாளனுக்கு வழங்கப்பட்டுள்ள சாதாரணமான சிறை விடுப்பு ஓரிரு நாட்களில் நிறைவடையவுள்ள நிலையில், அவரது சிறைவிடுப்பை மேலும் நீட்டிக்க வேண்டும் என்று அவரது தாயார் கோரிக்கை விடுத்திருக்கிறார்.
பேரறிவாளனுக்கு சிறை விடுப்பு வழங்கப்பட்டதன் நோக்கம் நிறைவேறாத நிலையில் இந்தக் கோரிக்கை நியாயமானதே.
கர்நாடகத்தில் கன்னடர்களுக்கே வேலை என்ற புதிய சட்டத்தைக் கொண்டு அரசு திட்டமிட்டுள்ள நிலையில், தமிழகத்திலும் தமிழர்களுக்கு வேலை என்ற புதிய சட்டத்தை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என பாமக கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
அவர் கூறியதாவது:-
மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட நீட் தேர்வால், கல்வி என்பது திறமை சார்ந்தது என்ற நிலை மாறி பணம் சார்ந்தது என்ற நிலை உருவாகியுள்ளது என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
அதைக்குறித்து அவர் கூறியதாவது:-
மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான தகுதி அளவீடாக மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட நீட் தேர்வு எத்தகைய பாதிப்புகளையெல்லாம் ஏற்படுத்திவிடக் கூடாது என்று அஞ்சினோமா, அத்தகைய பாதிப்புகள் அனைத்தும் ஒன்றன்பின் ஒன்றாக தமிழ்நாட்டு மாணவர்களைத் தாக்கத் தொடங்கியுள்ளன. இதனால் கல்வி என்பது திறமை சார்ந்தது என்ற நிலை மாறி பணம் சார்ந்தது என்ற நிலை உருவாகியுள்ளது.
தமிழகத்தில் ஆட்சி யார் வசம் உள்ளது என்பது பற்றிய குழப்பத்தில் இருந்து மக்களால் இன்னும் மீள முடியவில்லை. காரணம் நாளொன்றுக்கு ஒரு அறிக்கை எனும் விதத்தில் மக்களை குழப்பும் விதத்தில் ஆளும் கட்சியில் இருந்து பல அறிக்கைகள் வந்த வண்ணம் உள்ளது.
இந்நிலையில் தமிழகத்தின் இந்த நிலைமையை விமர்சிக்கும் வகையில் பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவர் பதிவிட்டுள்ளதவது
தமிழகத்திற்கு பாதிப்பில்லாமல் மேகேதாட்டு அணையை கர்நாடக கட்டிக்கொள்ளலாம் என தமிழக அரசு ஒப்புதல் அளித்திருகிறது. இதன்மூலம் தமிழக மக்களுக்கு தமிழக அரசு துரோகம் செய்திருக்கிறது என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது அறிக்கை கூறியுள்ளார்.
இதைக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-
மாநில உரிமைகள் மீட்டெடுக்கப்படும் நாளே உண்மையான விடுதலை நாள் என்று பாமக தலைவர் டாக்டர் ராமதாஸ் அவர்கள் தனது முகநூல் பக்கத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளார்
அவர் தனது அறிக்கையில் கூறியதாவது:-
இந்தியாவின் 71-ஆவது விடுதலை நாள் விழா நாளை கொண்டாடப்படவிருக்கும் நிலையில், இந்திய மக்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சென்னை உயர் நீதிமன்றத்தின் ஆட்சி மொழியாக தமிழை அறிவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
இதைக்குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-
சென்னை உயர்நீதிமன்றத்தின் அலுவல் மொழியாக தமிழை அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி மதுரையில் 9 வழக்கறிஞர்கள் மேற்கொண்டுள்ள காலவரையற்ற உண்ணாநிலை இன்று ஒன்பதாவது நாளை எட்டியிருக்கிறது. அவர்களில் இரு வழக்கறிஞர்களின் உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆனாலும் கோரிக்கைகள் ஏற்கப்படாதது கண்டிக்கத்தக்கது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.