மாண்டலே நகரில் சனிக்கிழமை நடந்த போராட்டத்தின்போது, ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும், ராணுவ வீரர்களுக்கும், தள்ளுமுள்ளு ஏற்பட்டதை அடுத்து, ராணுவத்தினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், துப்பாக்கிச் சூடும் நடத்தியதால், மேலும் இருவர் உயிரிழந்தனர்.
ராணுவத்திற்கு எதிராகவும், ஆங் சான் சூகியை விடுவிக்க கோரியும், ஜனநாயகத்தை மீட்கவும் போராடும் மக்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவதோடு அபராதமும் விதிக்கப்படும் என ராணுவம் எச்சரித்துள்ளது
மக்கள் போராட்டத்தை ஒடுக்குவதற்கு மியான்மரில் முதலில் பேஸ்புக்கை தடை செய்த ராணுவம், இப்போது டிவிட்டர், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றையும் முடக்கியது. இப்போது இணைய சேவையே முடக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் விவசாயிகளின் போராட்டம் 47வது நாளையும் கடந்து நடைபெற்றுவருகிறது. குறைந்தபட்ச ஆதரவு விலை தொடர்பான கோரிக்கையும் இந்த விவசாய போராட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது. இதற்கு மத்தியில், ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஒரு ஒப்பந்த நடவடிக்கை அரசியல் ரீதியிலான பரபரப்பையும் ஏற்படுத்துவதாக இருக்கிறது.
அரசியல் சீர்திருத்தங்களைக் கோரும் ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள், தாய்லாந்து மன்னர் மகா வஜிரலோங்கோன் (Maha Vajiralongkorn) மற்றும் பிரதமர் பிரயுத் சான்-ஓச்சா (Prayuth Chan-ocha) இருவரையும் குறிவைத்து முழக்கங்களை எழுப்புகின்றனர்.
கடந்த ஆண்டு செப்டம்பரில் நடைபெற்ற போராட்டத்தின்போது சீனா சார்பு ஹாங்காங் காவல்துறை அதிகாரி ஒருவர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக மாணவி ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார்
கடந்த மாதம் குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் முன்மொழியப்பட்ட தேசிய குடிமக்கள் பதிவு (NRC) ஆகியவற்றிற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களின் போது 'ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது உத்தரபிரதேச காவல்துறையின் நடவடிக்கைக்கு எதிராக' புகார் அளிக்க காங்கிரஸ் தலைவர்கள் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தை நாடியுள்ளனர்.
மோடி தலைமையிலான அரசாங்கத்தின் சமீபத்திய தொழிலாளர் மற்றும் வங்கி கொள்கைகளில் ஏற்பட்ட மாற்றங்களை எதிர்த்து மத்திய தொழிற்சங்கங்கள் ஜனவரி 8 புதன்கிழமை அகில இந்திய பொது வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன.
குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA) மற்றும் NRC-க்கு எதிரான போராட்டங்கள் தொடர்கையில், ஆர்ப்பாட்டங்கள் வன்முறையாக மாறியுள்ளது. இதன்போது பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததாக உத்தரப்பிரதேச அரசு 498 பேருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தேசப்பாதுகாப்பு மற்றும் நாட்டு நலனை மனதில் கொண்டு இந்திய மக்கள் எல்லோரும் ஒற்றுமையுடன் விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும் என ரஜினிகாந்த் கேட்டுக் கொண்டுள்ளார்.
குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து லக்னோவில் வெடித்தது போராட்டம். போராட்டக்காரர்கள் மீது கண்ணீர்ப்புகைக் குண்டு மற்றும் தடியடியை பயன்படுத்தி உ.பி. போலீசார்.
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (CAA) எதிராக பல திட்டமிட்ட போராட்டங்களை அடுத்து, தேசிய தலைநகரில் வியாழக்கிழமை மொத்தம் 17 மெட்ரோ நிலையங்கள் மூடப்பட்டன.
புதிதாக அமல்படுத்தப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (CAA) எதிராக நாடு முழுவதும் பல போராட்டங்கள் திட்டமிடப்பட்டுள்ளன. வடகிழக்கு மாநிலங்கள், குறிப்பாக அசாம், டெல்லி, உத்தரப்பிரதேசம் மற்றும் மேற்கு வங்கத்தின் சில பகுதிகள் இதுவரை இந்தச் சட்டம் மீது வன்முறை சீற்றத்தைக் கண்டுள்ளன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.