அமெரிக்காவுக்கு வேலைதேடி செல்லும் இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டினருக்கான ஹச்-1 பி பணி விசா வழங்க கட்டுப்பாடு விதிக்கும் அதிரடி உத்தரவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையொப்பமிட்டார். இதையடுத்து இந்த உத்தரவு இன்று முதல் நடைமுறைக்கு வந்தது.
அமெரிக்க அதிபர் பதவிக்கு கடந்த நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தின்போது குடியரசு கட்சி வேட்பாளராக போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப், ஹச்-1 பி விசா என்ற நடைமுறையின் மூலம் வெளிநாட்டினர் அனைவருக்கும் அமெரிக்காவில் எளிதாக வேலை கிடைக்கும் வாய்ப்பை பறிக்கும் வகையில் இனி தகுதி உள்ளவருக்கு மட்டுமே இத்தகைய விசாக்கள் வழங்கப்படும் என அறிவித்திருந்தார்.
வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை மற்றும் அணு ஆயுத சோதனை நடத்தி வருகிறது. இதனால் அங்கு போர் பதட்டம் உருவாகியுள்ளது. இப்பிரச்சினையில் தலையிட சீனா தயக்கம் காட்டி வருகிறது.
எனவே வடகொரியா அணுஆயுத மிரட்டலை அமெரிக்கா தனியாக சமாளிக்கும் என அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்து இருந்தார். அதன்படி அவர் தனது அதிரடி நடவடிக்கையை தொடங்கினார்.
வடகொரியாவின் அணு ஆயுத மிரட்டலை சமாளிக்கும் வகையில் காரல் வின்சன் என்ற விமானம் தாங்கி போர்க்கப்பலை கொரிய தீபகற்ப பகுதிக்கு அமெரிக்கா அனுப்பியுள்ளது.
சிரியாவில் அதிபராக உள்ள பஷார் அல் ஆசாத்துக்கு எதிராக கடந்த 7 ஆண்டாகளாக உள்நாட்டுப்போர் நீடித்து வருகிறது. இதில் இதுவரை குறைந்தது 3¼ லட்சம் பேர் கொல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இத்லிப் மாகாணம், கான் ஷேக்குன் நகரில் போர் விமானங்கள் மூலம் விஷ வாயு தாக்குதல் நடத்தின. இந்த விஷ வாயு தாக்குதலில் மக்கள் கூட்டம் கூட்டமாக பலியாகி வருகின்றனர். இதுவரை குழந்தைகள் உள்பட கிட்டத்தட்ட100-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சிரியாவில் அதிபராக உள்ள பஷார் அல் ஆசாத்துக்கு எதிராக கடந்த 7 ஆண்டாகளாக உள்நாட்டுப்போர் நீடித்து வருகிறது. இதில் இதுவரை குறைந்தது 3¼ லட்சம் பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், 76 லட்சம் பேர் இடம் பெயர்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்தப் போரின்போது சிரிய அதிபருக்கு ஆதரவான படைகள் ரசாயன ஆயுத தாக்குதலில் அவ்வப்போது ஈடுபடுவதாக சர்வதேச அளவில் குற்றம் சாட்டப்படுகிறது. உள்நாட்டு எதிர்க்கட்சிகளும் இந்த குற்றச்சாட்டை கூறுகின்றன.
சீன அதிபர் ஜி ஜின்பிங் ஏப்ரல் மாதம் அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இந்த சுற்று பயணத்தின்போது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை சந்தித்துப் பேசவிருக்கிறார். இந்த தகவலை சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ளது.
செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்திற்கு அனுமதி வழங்கும் மசோதாவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று கையெழுத்திட்டார்.
இந்த திட்டத்தின் படி 2033-ம் ஆண்டு வாக்கில் மனிதர்களை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்ப நாசா திட்டமிட்டுள்ளது.
இத்திட்டத்திற்காக 19.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவிடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய மசோதாவின் கீழ் செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்பவதோடு மட்டுமின்றி விண்வெளி ஆய்வுகள், ஒரியன் விண்கலத்திற்கான பணிகள் உள்ளிட்டவை மேற்கொள்ளப்பட இருக்கிறது.
இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி, 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் மூன்று டெஸ்டின் முடிவில் இரு அணிகளும் தலா 1 போட்டியில் வென்றுள்ளது. மூன்றாவது டெஸ்ட் ’டிரா’வில் முடிந்தது.
ராஞ்சி டெஸ்டின் முதல் நாளில் பவுண்டரி தடுக்கும் முயற்சியில், இந்திய கேப்டன் கோலிக்கு வலது தோள் பகுதியில் காயம் ஏற்பட்டது. இதை ஆஸ்திரேலிய வீரர்கள் களத்தில் குத்தி காட்டிக்கொண்டே இருந்ததால் கோலி ஸ்மித்தை செய்தியாளர்கள் சந்திப்பில் தாக்கினார்.
இதனால் கோபம் அடைந்தத ஆஸ்திரேலிய ஊடகம் ஒன்று, விளையாட்டு உலகின் டொனால்டு டிரம்ப் கோலி என செய்தி வெளியிட்டுள்ளது.
விண்வெளி ஆய்வில் இந்தியாவின் சாதனையை கண்டு அமெரிக்கா வியப்படைந்துள்ளது.
இந்தியா விண்வெளி ஆய்வில் பல புதிய சாதனைகளை அடுத்தடுத்து படைத்து வருகிறது.உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட செயற்கைகோள்கள், ராக்கெட்டுகள், ராக்கெட்டுகளை இயக்கும் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கிரயோஜனிக் என்ஜின்களை சொந்தமாக உருவாக்கி, விண்வெளி ஆய்வு துறையில் வெற்றிகொடி நாட்டிவரும் இந்தியா, உள்நாட்டு தேவைக்காக மட்டுமின்றி, வெளிநாடுகளுக்கு சொந்தமான பல்வேறு வகையான செயற்கை கோள்களையும் இங்கிருந்தபடி விண்ணில் செலுத்தி உலக நாடுகளின் கவனத்தை கவர்ந்து வருகிறது.
அமெரிக்காவுக்குள் நுழைய ஈரான், ஈராக், சிரியா சூடான், சோமாலியா, லிபியா மற்றும் ஏமன் ஆகிய 7 முஸ்லிம் நாடுகளை சேர்ந்தவர்கள் தடை விதித்து அமெரிக்காவின் அதிபராக பதவி ஏற்ற டொனால்டு டிரம்ப் உத்தரவிட்டார். மேலும் இந்த நாடுகளைப் பொறுத்தமட்டில் தூதரக ரீதியிலான ‘ராஜ்ய விசா’ மட்டும் தொடர்ந்து வழங்கப்படும். மற்றபடி தனி நபர்களுக்கு விசா வழங்கப்படாது என்று குறிப்பிட்டார். ஆனால் டிரம்பின் இந்த முடிவுக்கு அமெரிக்க மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
கன்சாஸில் இந்திய இன்ஜினியர் கொல்லப்பட்டதை கண்டிக்கிறேன். மீண்டும் இது போன்ற சம்பவம் நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் கன்சாஸ் நகரில் உள்ள மதுபான விடுதியில், ஸ்ரீனிவாஸ் குச்சிபொட்லா என்ற இந்தியர் அமெரிக்கரான ஆதம் புரின்டன் என்பவரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
கடந்த புதன் கிழமை அமெரிக்காவைச் சேர்ந்த நபர் ஒருவரால் இனவெறியுடன் சுட்டுக் கொல்லப்பட்டார் ஸ்ரீனிவாஸ் குச்சிபொட்லா. மேலும் உடன் பணிபுரியும் மற்றொரு என்ஜினீயர் அலோக் மதசானி மற்றும் அமெரிக்கர் ஒருவரும் காயம் அடைந்தனர். இந்த சம்பவத்திற்கு பிறகு அமெரிக்க வாழ் இந்தியர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் கன்சாஸ் நகரில் உள்ள மதுபான விடுதியில், ஸ்ரீனிவாஸ் குச்சிபொட்லா என்ற இந்தியர் அமெரிக்கரான ஆதம் புரின்டன் என்பவரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இச்சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் ஹிலாரி கிளின்டன், ஸ்ரீனிவாஸ் குச்சிபொட்லா மரணம் குறித்து தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.
ஹிலாரி கிளின்டன் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியதாவது:-
நாட்டில் அச்சுறுத்தல்களும் வெறுப்பினவாதக் குற்றங்களும் உயர்ந்துகொண்டே செல்கின்றன.
ஈராக், சிரியா, ஈரான், லிபியா, சூடான், சோமாலியா, ஏமன் ஆகிய 7 முஸ்லிம் நாடுகளுக்கு ‘விசா’ வழங்குவதை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் 3 மாதங்களுக்கு நிறுத்தி வைத்து உத்தரவு பிறப்பித்தார்.
டிரம்ப் உத்தரவுக்கு அமெரிக்கா முழுவதும் இடைக்கால தடை விதித்து கோர்ட் உத்தரவு.
அமெரிக்காவின் புதிய அதிபராக பதவி ஏற்ற டொனால்டு டிரம்ப் அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். சமீபத்தில் ஈரான், ஈராக், சிரியா சூடான், சோமாலியா, லிபியா மற்றும் ஏமன் ஆகிய 7 முஸ்லிம் நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்குள் நுழைய 90 நாட்கள் விசா தடை விதித்தார்.
மேலும் சிரியா அகதிகள் நுழைய நிரந்தர தடை விதித்தார். இது அமெரிக்காவில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராடி வருகின்றனர்.
மும்பை பயங்கரவாதத் தாக்குதலுக்குச் சதித் திட்டம் தீட்டிய ஜமாத்-உத்-தாவா தீவிரவாத அமைப்பின் தலைவர் ஹபீஸ் சயீத் நேற்று இரவு ஒரு வீடியோ ஒன்று வெளியிட்டார் அதில் இந்திய பிரதமர் மோடிக்கும், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புக்கும் இடையே வளர்ந்து வரும் நட்பினால் லாகூரில் வீட்டுக் காவலில் என்னை வைக்கப்பட்டுள்ளது என்றார்.
மும்பை பயங்கரவாதத் தாக்குதலுக்குச் சதித் திட்டம் தீட்டிய ஜமாத்-உத்-தாவா தீவிரவாத அமைப்பின் தலைவர் ஹபீஸ் சயீது, லாகூரில் நேற்று (திங்கள்கிழமை) வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.
பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தின் உள்துறை அமைச்சகம் பிறப்பித்த உத்தரவின்பேரில், செளபுர்ஜி மசூதியில் இருந்த ஹபீஸ் சயீதை லாகூர் போலீஸார் திங்கள்கிழமை மாலை சுற்றி வளைத்தனர்.
ஜமாத்-உத்-தாவா பயங்கரவாத அமைப்புக்கு எதிராகவும், ஹபீஸ் சயீதுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்காவிட்டால், பாகிஸ்தான் மீது தடை விதிக்க நேரிடும் என்று அமெரிக்க அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டது.
அமெரிக்காவில் வெளிநாட்டினர் மற்றும் அகதிகள் குடியேற்ற சட்டத்தில் மாற்றங்களை செய்து அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டார். வெளிநாட்டினர் மற்றும் அகதிகள் குடியேற்றத்தை தடுக்க கட்டுப்பாடுகள் மற்றும் மாற்றங்களை விதித்து உள்துறை அமைச்சகத்துக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்த உத்தரவின்படி சிரியா அகதிகளுக்கும் அனுமதி மறுக்கப்படுகிறது. இவை அமெரிக்காவில் தீவிரவாதிகள் உள்ளே நுழைய முடியாதபடி பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தும் வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மெக்சிகோவுடனான அமெரிக்க எல்லையில் தடுப்புச்சுவர் கட்டப்படும். எல்லையில்லாத தேசம் தேசமே கிடையாது என டிரம்ப் அறிவிப்பு
மெக்சிகோவில் இருந்து சட்டவிரோதமாக அமெரிக்காவிற்குள் ஊடுருவல், போதைப்பொருள் கடத்தல் என்பது சாதாரண நிகழ்வாக உள்ளது. அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தின்போது, தான் வெற்றி பெற்றால் மெக்சிகோவுடனான எல்லையில் தடுப்புச்சுவர் கட்டப்படும் என டொனால்டு டிரம்ப் அறிவித்தார். அதோடு மட்டுமல்லாமல், தடுப்புச் சுவர் கட்டுவதற்கான செலவை மெக்சிகோ ஈடுசெய்ய வேண்டும் என கூறியிருந்தார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.