Chennai Police Commissioner: சென்னை எனக்கும் ஒன்றும் புதிது இல்லை, இங்கு எல்லா நிலையிலும் நான் பனிபுரிந்துள்ளேன் என்று புதிதாக பொறுப்பேற்றுள்ள சென்னை காவல் ஆணையர் அருண் தெரிவித்துள்ளார்.
ஏழை மக்கள் டாஸ்மாக் மதுபான கடைகளில் விலை அதிகமாக இருக்கிறது என்று நினைக்கின்ற காரணத்தால், கள்ளுக்கடைகளை திறப்பதன் மூலம் ஏழை எளிய மக்களை காப்பாற்ற முடியும் என காங்கிரஸ் எம்எல்ஏ இ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேட்டி.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 4 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் 10 ஆயிரம் கிராம சாலைகள் மேம்படுத்தப்படும் என அறிவித்துள்ளார்.
கடந்த 2023-24ஆம் ஆண்டில் டாஸ்மாக் மதுபான விற்பனை மூலம் 45 ஆயிரத்து 886 கோடி ரூபாய் வருவாயைத் தமிழக அரசு ஈட்டியுள்ளதாகக் கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிலேயே அரசு மருத்துவமனைகளில் இலவச செயற்கை கருத்தரித்தல் மையம் தமிழ்நாட்டில் தான் முதன்முதலில் திறக்கப்பட்டுள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெருமிதம்.
அடிதடி வழக்கில் லஞ்சம் பெற்றுக்கொண்டு ஒரு நபரை மட்டும் விடுவித்து விட்டதாக திருவொற்றியூர் காவல் ஆய்வாளர் மீது குற்றம் சாட்டிய பொதுமக்கள், திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட குடிநீர் திட்டங்களை செயல்படுத்தாமல் திமுக அரசு செயற்கையான குடிநீர் பஞ்சத்தை ஏற்படுத்துவதாக, அதிமுக தலைமை நிலைய செயலாளர் எஸ் பி வேலுமணி தெரிவித்தார்.
நீலகிரி மற்றும் கொடைக்கானலுக்கு இ-பாஸ் முறையை அமல்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி இருந்தது. இதனை தொடர்ந்து நேற்று முதல் வரும் ஜூன் 30 ஆம் தேதி வரை இ - பாஸ் முறையானது அமலுக்கு வந்ததுள்ளது. இதன் ஒரு பகுதியாக நீலகிரி மாவட்டத்திற்குள் செல்லும் 13 வழித்தடங்களிலும் இ- பாஸ் சோதனை நேற்று முதல் நடந்து வருகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.