கடன்களை முன்கூட்டியே அடைப்பதற்கு அபராதம் விதிக்கக் கூடாது... RBI அதிரடி

வணிகம் அல்லாத நோக்கங்களுக்காக வாங்கிய தனிநபர் கடன்களுக்கு கடனை முன்கூட்டியே திரும்ப செலுத்துவாதற்கான அபாரத தொகைக்கும் விலக்கு அளிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது வணிக நோக்க கடன்களுக்கு அந்த சலுகை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Feb 22, 2025, 06:10 PM IST
  • கடனை முன்கூட்டியே திருப்பிச் செலுத்துதல் அல்லது மூடுவதற்கு விதிக்கப்படும் அபராதம் 4-5 சதவீதமாக உள்ளது.
  • ரூ.7.50 கோடி வரை கடன் வாங்கியவர்கள் பயனடைவார்கள்.
  • கடன்களை முன்கூட்டியே அடைக்க அனுமதிக்க வேண்டும்
கடன்களை முன்கூட்டியே அடைப்பதற்கு அபராதம் விதிக்கக் கூடாது...  RBI அதிரடி title=

கடன் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு நிம்மதி அளிக்கும் செய்தி வெளியாகியுள்ளது. தனிநபர்கள் மற்றும் சிறு மற்றும்  குறு நிறுவனங்கள் (MSEs) தாங்கள் பெற்ற கடன்களை முன்கூட்டியே திருப்பிச் செலுத்தினாலோ அல்லது முன்கூட்டியே கடனை முழுமையாக அடைத்தாலோ, சம்பந்தப்பட்ட வங்கிகள் மற்றும் பிற நிதி நிறுவனங்கள் அபராத தொகை விதிக்கக் கூடாது என ரிசர்வ் வங்கி முன்மொழிந்துள்ளது. இந்த கடன்களில் வணிக நோக்கங்களுக்கான கடன்களும் அடங்கும்.

தற்போது, ​​கடன் வாங்குபவர்களுக்கு முன்கூட்டிய கடனை திருப்பிச் செலுத்துதல் அல்லது மூடுவதற்கு  விதிக்கப்படும் அபராதம் 4-5 சதவீதமாக உள்ளது. வணிகம் அல்லாத நோக்கங்களுக்காக வாங்கிய தனிநபர் கடன்களுக்கு முன் கூட்டியே கடனை திரும்ப செலுத்துவதற்கான அபாரதத்திற்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ள நிலையில். தற்போது வணிக நோக்க கடன்களுக்கும் அந்த சலுகை வழங்க ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது.

ரிசர்வ் வங்கி வெளியிட்ட வரைவு சுற்றறிக்கை

"தனிநபர்களாலும், MSE நிறுவனங்களாலும், வணிக நோக்கங்களுக்காக மிதக்கும் வட்டி விகிதத்தில் பெறப்பட்ட கடன்களுக்கு, Tier-1 மற்றும் Tier-2 கூட்டுறவு வங்கிகள் மற்றும் ஆரம்ப நிலை NBFC நிறுவனங்களைத் தவிர, அதன் வரம்பிற்குள் உள்ள ஒழுங்குபடுத்தப்பட்ட நிறுவனங்கள் எந்தக் கட்டணமும்/அபராதமும் விதிக்கக் கூடாது" என RBI வரைவுச் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், ரூ.7.50 கோடி வரை கடன் வாங்கியவர்கள் பயனடைவார்கள்.

ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கைக்கு காரணம்

MSE நிறுவனங்களுக்கு அனுமதிக்கப்பட்ட கடன்களுக்கு முன்கூட்டியே செலுத்துதல் கட்டணம்/முன்பணம் செலுத்துதல் அபராதம் ஆகியவற்றைப் பொறுத்து ஒழுங்குபடுத்தப்பட்ட நிறுவனங்களின் நடைமுறைகள் மாறுபடுகின்றன என்பதை ரிசர்வ் வங்கியின் மதிப்பாய்வுகள் கூறுகின்றன. இது தொடர்பாக வாடிக்கையாளர்களிடம் இருந்து அதிக புகார்கள் வருகின்றன. கூடுதலாக, சில ஒழுங்குபடுத்தப்பட்ட நிறுவனங்கள் கடன் ஒப்பந்தங்கள்/ஒப்பந்தங்களில் குறைந்த வட்டி விகிதங்கள் அல்லது சிறந்த சேவை விதிமுறைகளைப் பயன்படுத்திக் கொள்வதற்காகவும், கடன் வாங்குபவர்கள் வேறொரு வங்கி அல்லது நிறுவனத்திற்கு கடனை மாற்றுவதைத் தடுக்கும் வகையில் கட்டுப்படுத்தப்பட்ட உட்பிரிவுகளைச் சேர்த்துள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | PM Kisan 19வது தவணை 2 நாட்களில் வருகிறது: தவணைத் தொகையை செக் செய்யும் எளிய வழி இதோ

ரிசர்வ் வங்கியின் வரைவு சுற்றறிக்கை

வரைவு சுற்றறிக்கை மேலும், ஒழுங்குபடுத்தப்பட்ட நிறுவனங்கள் குறைந்தபட்ச லாக்-இன் காலத்தைக் குறிப்பிடாமல், கடன்களை முன்கூட்டியே அடைக்க அனுமதிக்க வேண்டும் என்று கூறுகிறது. முன்கூட்டியே கனை அடைக்க கட்டணம்/அபராதம் எதுவும் விதிக்கக்கூடாது. மேலும், ஒழுங்குபடுத்தப்பட்ட நிறுவனங்களால் தள்ளுபடி செய்யப்பட்ட அல்லது கடன் வாங்குபவர்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்படாத கடன்களை முன்கூட்டியே அடைக்கும் போது, எந்தச் சூழ்நிலையிலும் கடந்த காலக் கட்டணங்கள் வசூலிக்கப்படக்கூடாது எனவும் கூறியுள்ளது.

வரைவு சுற்றறிக்கை குறித்த கருத்துகளை கோரியுள்ள ஆர்பிஐ 

ரிசர்வ் வங்கியின் வரைவு சுற்றறிக்கை தொடர்பாக,  2025 மார்ச் 21ம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட துறை அல்லது நிறுவனங்களிடம் இருந்து இந்த வரைவு குறித்த கருத்துகளை ஆர்பிஐ கோரியுள்ளது. முன்னதாக வணிகம் அல்லாத நோக்கங்களுக்காக வாங்கிய தனிநபர் கடன்களுக்கே இந்த அபாரத விலக்கு அளிக்கப்பட்டது. தற்போது வணிக நோக்க கடன்களுக்கு அந்த சலுகை வழங்க ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது.

மேலும் படிக்க | PF உறுப்பினர்களுக்கு 3 குட் நியூஸ்: வட்டி விகிதம், ஓய்வூதிய உயர்வு... 6 நாட்களில் முக்கிய அறிவிப்பு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News