ஆறுபேரின் விடுதலைக்கான முன்னெடுப்புகளை விரைந்து முன்னெடுத்து சாத்தியப்படுத்த வேண்டும்.என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
அரசு நிலங்களை அதிகாரப்பூர்வமாக அபகரிக்க வழிவகுக்கும் புதிய நில பரிமாற்ற உத்தரவை திமுக அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
திமுக அரசு பொறுப்பேற்று இன்றோடு ஓராண்டு ஆகும் நிலையில் அதிமுக தகவல் தொழில்நுட்ப அணியின் சார்பில் சென்னை முழுவதும் விமர்சித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.
தனியார் துறை வேலைவாய்ப்பிலும் இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் உரிய திருத்தம் கொண்டுவர வேண்டும் என தமிழக அரசு மத்திய அரசை வலியுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் பிளாஸ்டிக் தடை உத்தரவை உறுதி செய்து சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் ஆஷா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை ஒட்டி அமைந்துள்ள பார்களை ஆறு மாதங்களுக்குள் மூட வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவிற்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.