வன்னியர்களுக்கான 10.5 விழுக்காடு சிறப்பு இட ஒதுக்கீட்டைப் பொறுத்தவரைக்கும், சட்ட வல்லுநர்களுடன் உரிய ஆலோசனை நடத்தி, நிச்சயம் சமூக நீதி நிலைநாட்டப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் நடைமுறையில் இருக்கும் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டிற்கான 20 சதவீதத்தில் வன்னியர்களுக்காக ஒதுக்கப்பட்ட 10.5 சதவீத உள் ஒதுக்கீட்டை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
10.5 சதவீத சிறப்பு ஒதுக்கீடு விவகாரத்தில் சட்ட வல்லுநர்களைக் கலந்து ஆலோசித்து தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
வன்னியர்களுக்கு 10.50% உள் இட ஒதுக்கீடு வழங்கும் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு சாதகமானது என்றும், விரைவில் எட்டிவிடும் தொலைவிலேயே 10.50% உள் இட ஒதுக்கீடு உள்ளதாகவும் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில், கடந்த மாதம் உடுப்பி அரசு உயர் நிலைப்பள்ளி மாணவிகள் சிலர் ஹிஜாப் அணிந்து வர தொடங்கினர். இது சீருடை விதியை மீறும் செயல் என பள்ளி நிர்வாகம், இவர்களை வகுப்புகளுக்குச் செல்ல அனுமதிக்காததை அடுத்து ஹிஜாப் சர்ச்சை தொடங்கியது.
கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய தடை விதித்தது செல்லும் என்ற கர்நாடக உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனு ஹோலி விடுமுறைக்கு பின் விசாரிக்கப்படும் என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
பேரறிவாளன் ஜாமீன் குறித்து தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ள நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கால்நூற்றாண்டு சட்டப்போராட்டத்தில் இது ஒரு முக்கிய மைல்கல் என தெரிவித்துள்ளார்.
உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்கள் தொடர்பான மனு மீதான விசாரணையை மேற்கொண்ட உச்சநீதிமன்றம், 'போரை நிறுத்த புடினுக்கு உத்தரவிட முடியுமா?' என மனுதாரரிடம் கேள்வி எழுப்பியுள்ளது.
கர்நாடகாவின் ஷிவமொகாவில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஹிஜாப் அணிவதற்கு எதிராக பேஸ்புக்கில் பதிவு எழுதியதற்காக 26 வயது இந்து வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
பிரிவு 144 அமல் படுத்தப்படுவதை அடுத்து, ஒரே இடத்தில் 5 அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்படுவதோடு, தடை உத்தரவை பின்பற்றாதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
Bank News: 21 ஆண்டுகளுக்கு முன்பு பணியில் இருந்து நீக்கப்பட்ட வங்கி எழுத்தரின் வாதங்களை ஏற்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. வங்கியில் பணிபுரிவது மிகவும் பொறுப்பான பதவியாகக் கருதப்படுவதாகவும், தவறு செய்த ஊழியரை பணியில் இருந்து நீக்குவது நியாயமானது என்றும் நீதிமன்றம் கூறியது.
கர்நாடக உயர் நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மாணவிகள் மனு தக்கல் செய்து, இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என கோரினர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.