ஹைதராபாத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில், இளைஞர் ஒருவர் சகோதரர் மற்றம் உறவினரால், கத்தியால் துடிக்க துடிக்க குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே, பள்ளி பேருந்தில் ஏற்பட்ட மோதலில் 9 ஆம் வகுப்பு மாணவன் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த மோதல் ஏற்பட்டதற்கான காரணம் என்ன? வெளியான பரபரப்பு பின்னணி.
திருப்பத்தூர் அருகே நிலத்தகராறு காரணமாக திமுகவைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் துணைத்தலைவரின் மனைவி சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ள நிலையில், ஊராட்சி மன்றத் துணைத்தலைவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தருமபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கேரளாவில், 2 வயது பெண் குழந்தையை அவரது தாய்மாமா கிணற்றில் வீசி கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. கேரளாவை அதிரவைத்துள்ள இந்த சம்பவம் முன் விரோதமா? மூடநம்பிக்கையின் உச்சமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பூட்டிய வீட்டில் பல மாதங்களாக கிடந்த 2 சடலங்கள் தற்போது மீட்கப்பட்டுள்ள சம்பவம் சென்னை திருமுல்லைவாயில் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொலை நடந்தது பெண் சாமியார் அன்னபூரணிக்கு சொந்தமான வீடு என கூறப்படும் நிலையில் இந்த வீட்டில் பிணமாக கிடந்தவர்கள் எப்படி உயிரிழந்தார்கள் என்ற உண்மை வெளியாகி உள்ளது.
ஸ்ரீரங்கத்தில் பிரபல ரவுடி திலீப்பின் ஆதரவாளர் ரவுடி அன்பு கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அவ்வழக்கில் 6 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
நீலகிரியில் யானை தாக்கி உயிரிழந்ததாக கூறப்பட்ட நபர் நண்பர்களால் துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக 13 பேரை போலீசார் கைது செய்துள்ள நிலையில் மேலும் இதில் சம்பந்தப்பட்டவர்கள் யாரேனும் இருக்கின்றனரா என தீவிரமாக விசாரித்து வருகின்றனர். என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.