மதுரை விமான நிலையத்தில் எடப்பாடி பழனிசாமியை விமர்சித்து முழக்கம் எழுப்பிய இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர். அந்த இளைஞர் விமானத்துக்கு அழைத்துச் செல்லும் பேருந்தில் எடப்பாடி பழனிசாமியை துரோகி என அழைத்தார்.
மதுரையில் தங்கச்சியை கேலி செய்தவரை கண்டித்த அண்ணனை அவரது மனைவி, மகள் கண் முன்பாகவே ஒரு கும்பல் ஓட ஓட விரட்டி கொலை செய்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது. கொலை செய்துவிட்டு தப்பியோடும் கும்பலின் பரபரப்பு சிசிடிவி காட்சிகளும் வெளியாகியுள்ளது.
தென் மாவட்டங்களுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சட்டம் ஒழுங்கை சரியாக பராமரிக்குமாறு 5 மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
மக்களுக்கு தேவையான திட்டங்களை நிறைவேற்ற தமிழக அரசு மக்களை தேடி சென்று கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொடுப்பதாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மத்திய பாஜக குறைவான தொகையே ஒதுக்கியுள்ள நிலையில், அதுகுறித்து பாஜக மகளரணி தேசிய தலைவர் வானதி சீனிவாசனிடம் கேள்விக்கேட்கப்பட்டது.
மதுரை ரயில் நிலையத்தை தமிழகத்திலேயே முன்மாதிரியான நிலையமாக வடிவமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.