கடந்த வாரம் பார்லிமென்டில் பாஸ்போர்ட் விண்ணப்ப முறை பற்றி கேள்விகள் எழுப்பின. இதற்கு பதிலளித்த மத்திய அரசு பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் முறை எளிமையாக்கப்பட உள்ளது என பதிலளித்துள்ளது.
மத்திய அமைச்சர் வி.கே.சிங் அளித்த பதில்:-
பாஸ்போர்ட் பெறுவதற்கு இனி பிறப்பு சான்றிதழ் தேவையில்லை. ஆதார் அல்லது பான் கார்டை சமர்ப்பித்தால் போதும். தத்தெடுக்கப்பட்ட குழந்தைகள், அவர்களை பராமரித்த காப்பகத்திடம் இருந்து பிறந்த தேதி தொடர்பான ஆவணத்தை பெற்று அளிக்கலாம்.
மக்கள் தங்களது ஸ்மார்ட்போன்களில் ஆதார் அடையாள அட்டையை எடுத்துச் செல்லும் வகையில் புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
எம்ஆதார் எனும் புதிய செயலியை கொண்டு வாடிக்கையாளர்கள் தங்களது ஆதார் அட்டையை ஸ்மார்ட்போன்களில் வைத்திருக்க முடியும். இதனால் ஆதார் அட்டையை கையில் வைத்திருக்க அவசியம் இல்லை.
> கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கும் இந்த செயலியை ஆண்டராய்டு ஸ்மார்ட்போன் வைத்திருப்போர் டவுன்லோடு செய்ய முடியும்.
> இந்த செயலியில் பல்வேறு ஆப்ஷன்கள் வழங்கப்படுகிறது. முதலில் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு ஏற்ற ஆதார் புரோபைல்களை டவுன்லோடு செய்யலாம்.
ஆதார் அட்டை தொடர்பான வழக்கு 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு இன்று மாற்றப்பட்டுள்ளது.
அரசின் திட்டங்கள் மற்றும் மானியங்களைப் பெற ஆதார் எண் கட்டாயம் என எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு பதிவானது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
அதில், வரும் செவ்வாய், புதன்கிழமைகளில் ஆதார் எண் தொடர்பான வழக்கை அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜுலை 1-ம் தேதி முதல் தங்களது ‘பான் கார்டு’ எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவு.
‘பான் கார்டு’டன் ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என்ற உத்தரவு வரும் ஜுலை மாதம் 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. மத்திய அரசின் அனைத்து திட்டங்களின் பயனைப் பெற வேண்டும் என்றால் ஆதார் எண் கட்டாயம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
சமூக நலத்திட்டங்களில் ஆதாரை கட்டாயமாக்கும் மத்திய அரசின் முடிவுக்குத் தடை விதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சமூக நலத்திட்டங்களுக்கு ஆதார் எண் அவசியம் என்று மத்திய அரசு அறிவித்தது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் வந்தது. இதனை விசாரித்த நீதிபதிகள் கூறியதாவது:-
வங்கி கணக்கு தொடங்குவதற்கு ஆதார் அடையாள இனி கட்டாயம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
வங்கி கணக்கு வைத்திருப்போரும் ஆதார் எண்ணை டிசம்பர் மாதத்துக்குள் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் சுமார் 90% பேருக்கு ஆதார் அடையாள எண் அளிக்கப்பட்டு விட்டதாக மத்திய அரசு தரப்பில் கூறப்படுகிறது.
இதையடுத்து, அரசு திட்டங்களில் முறைகேடுகளை களைய அவற்றுக்கு ஆதார் எண்ணை கட்டாயமாக்கி வருகிறது மத்திய அரசு. காஸ் இணைப்பு, மதிய உணவு, பயிர் காப்பீட்டு திட்டம், விமான பயணம், திருப்பதி தரிசனம் உள்ளிட்டவைகளுக்கு ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
வருமானவரி தாக்கல் செய்வதற்கும், பான் கார்டிற்கு விண்ணப்பிப்பதற்கும் ஆதார் அவசியம் என்ற மத்திய அரசின் உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இவ்வழக்கை நேற்று முன்தினம் விசாரித்த சுப்ரீம் கோர்ட் பான் எண் பெற ஆதார் அவசியமில்லை என தெரிவித்தது. இந்நிலையில் மத்திய அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், வருமான வரி தாக்கல் செய்யவும், பான் எண்ணுக்கு விண்ணப்பிக்கவும் ஜூலை 1 வரை ஆதார் அவசியம் இல்லை.
ஜூலை 1-ம் தேதி முதல் வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கும், பான் அட்டை கோரி விண்ணப்பிப்பதற்கும் ஆதார் எண் கட்டாயம் என்று மத்திய நேரடி வரிகள் விதிப்பு வாரியம் தெரிவித்துள்ளது.
பான் அட்டைகள் கோரி விண்ணப்பிப்பதற்கு ஆதார் எண் கட்டாயம் என்ற வருமான வரிச் சட்டத்தின் ஷரத்து சட்டரீதியாக செல்லுபடியாகும் என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. எனினும், ஆதார் இல்லாதவர்களும் வருமான வரி தாக்கல் செய்யலாம் என்றும் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.
பான் கார்டு மற்றும் ஆதார் கார்டுகளில் உள்ள தவறுகளை திருத்த, வருமான வரித்துறையின் இணைய தளத்தில் புதிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
வருமான வரித்துறையின் இணைய தளத்தில், இரண்டு புதிய இணைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதில் முதல் இணைப்பில், பான் கார்டில் உள்ள தவறுகளை திருத்தவும் மாற்றங்களை ஏற்படுத்தவும் வசதி உள்ளது. அதே போல், புதிய பான் கார்டுக்கு விண்ணப்பிக்கவும் முடியும்.
இதேபோல் மற்றொரு இணைப்பில், ஆதார் கார்டில் மாற்றம் செய்யவும், புதிய தகவல்களை இணைக்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது.
ஆதார் தொடர்பா விசாரித்த சுப்ரீம் கோர்ட் அரசின் நலத்திட்டங்களை பெறுவதற்கு ஆதார் எண்ணை கட்டாயமாக்கக் கூடாது என மத்திய அரசிற்கு அறிவுரை வழங்கி உள்ளது.
ஆதார் தொடர்பான வழக்கை இன்று விசாரித்த சுப்ரீம் கோர்ட் மத்திய அரசு அரசின் நலத்திட்டங்களுக்கு ஆதாரை கட்டாயமாக்கக் கூடாது என்று கூறியுள்ளது.
அதே நேரம் வங்கி கணக்கு துவங்குவது உள்ளிட்ட திட்டங்களுக்கு ஆதார் எண் கட்டாயம் என்பதை தடை செய்ய முடியாது. ஆதார் தொடர்பான வழக்குகளை விசாரிப்பதற்கு 7 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் அமைப்பது தற்போதைக்கு சாத்தியமில்லை என மத்திய அரசிற்கு அறிவுரை வழங்கி உள்ளது.
பான் கார்டு பெறுவதற்கு மற்றும் வருமான வரி தாக்கல் செய்வதற்கு ஆதார் எண்ணைக் கட்டாயமாக்கும் நடைமுறையை மத்திய அரசு முன்மொழிந்துள்ளது.
இந்நிலையில் வரும் ஜூலை 1-ம் தேதி முதல் மேற்குறிப்பிட்ட பான் கார்டு பெறுவதற்கு மற்றும் வருமான வரி தாக்கல் செய்வதற்கும் ஆதார் எண் கட்டாயம் ஆக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. இதுகுறித்து, மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி இன்று விளக்கம் அளிப்பார் என்று கூறப்படுகிறது.
ஏற்கெனவே ஆதார் எண்ணை பல அடிப்படை உரிமைகளை பெறுவதற்குக் கூட கட்டாயம் ஆக்குவதில் மத்திய அரசு முனைப்பு காட்டி வரும் நிலை உள்ளது.
வங்கிகளில் கணக்கு வைத்திருப்போர் கட்டாயம் ஆதார் எண் பதிவது செய்ய வேண்டும் என்று மத்திய அரசு கூறிவருகிறது.
நாடு முழுவதும் இதுவரை, 112 கோடி பேருக்கு ஆதார் எண் வழங்கப்பட்டுள்ளது. அதில் மொத்தம் 40 கோடி வங்கிக்கணக்குகளில் ஆதார் எண்கள் இணைக்கப்பட்டுள்ளன. சுமார் 2 கோடி பேர் ஒவ்வொரு மாதமும் தங்கள் ஆதார் எண்ணை வங்கி கணக்குகளில் இணைத்து வருகின்றனர்.
மேலும், டிஜிட்டல் பணப்பரிமாற்றத்திற்கு ஏற்ற வகையில், பேடிஎம், ஏர்டெல், இந்தியா போஸ்ட் ஆகியவைகளின் மூலம் பேமெண்ட் பேங்க் உருவாக்கப்பட்டுள்ளது. ஏர்டெல் பேமெண்ட் பேங்க் கடந்த நவம்பர் மாதம் முதல் கட்டமாக துவங்கப்பட்டது.
கிராமப்புற 100 நாள் வேலை திட்டத்திற்கும் ஆதார் எண் கட்டாயம் என மத்திய அரசு அறிவிப்பு.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் செயல்படும் 100 நாள் வேலை திட்டத்திற்கு வரும் ஏப்ரல் 1 முதல் ஆதார் அடையாள அட்டை கட்டாயம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.