வாய்வழி சுகாதாரத்திற்கும் இதய பாதுகாப்பிற்கும் தொடர்பு உண்டா?

Oral Health: வாய்வழி நோய்கள் நமது உடலின் மற்ற பாகங்களையும் பாதிப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். பற்கள் மற்றும் ஈறுகள் ஆரோக்கியமாக இல்லாவிட்டால், உடலில் வீக்கம் அதிகரிக்கும் அபாயம் ஏற்படுகின்றது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Feb 22, 2025, 11:53 PM IST
  • அதிகரிக்கும் வாய்வழி நோய்கள்.
  • வாய்வழி நோய்கள் நமது உடல் பாகங்களைப் பாதிக்கின்றன.
  • ஃப்ளாசிங் மூலம் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கலாம்.
வாய்வழி சுகாதாரத்திற்கும் இதய பாதுகாப்பிற்கும் தொடர்பு உண்டா? title=

Oral Health: உங்கள் பற்களுக்கு இடையில் ப்ளேக் (Plaque), அதாவது அழுக்குகள் சிக்கி, அவை நீண்ட நாட்களுக்கு சுத்தம் செய்யப்படாமல் இருந்தால், பக்கவாதம் ஏற்படும் அபாயம் உள்ளது. இது ஆச்சரியமாக இருந்தாலும், உண்மையான விஷயம். வாரத்திற்கு ஒரு முறையாவது ஈறுகளுக்கு இடையில் சிக்கியுள்ள பிளேக்கை துலக்கி அகற்றுபவர்களுக்கு பக்கவாதம் ஏற்படும் அபாயம் குறைவாக இருப்பதாக சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆய்வின் கண்டுபிடிப்புகள் பலருக்கு ஆச்சரியத்தை அளித்துள்ளன.

வாய்வழி நோய்கள் நமது உடலின் மற்ற பாகங்களையும் பாதிப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். பற்கள் மற்றும் ஈறுகள் ஆரோக்கியமாக இல்லாவிட்டால், உடலில் வீக்கம் அதிகரிக்கும் அபாயம் ஏற்படுகின்றது. இது தமனிகளில் அடைப்பை ஏற்படுத்தும். மேலும் இரத்தக் கட்டிகள் ஏற்படுவதால் பக்கவாதம் ஏற்படும் அபாயமும் அதிகரிக்கின்றது.

Flossing: ஃப்ளாசிங் மூலம் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கலாம்

பற்களுக்கு இடையில் சிக்கியுள்ள பாக்டீரியா மற்றும் பிளேக்கை அகற்றும் செயல்முறை ஃப்ளோசிங் என்று அழைக்கப்படுகிறது. வாரத்திற்கு ஒரு முறையாவது ஃப்ளாஸ் பயன்படுத்துபவர்களுக்கு இரத்தக் கட்டிகளால் ஏற்படும் பக்கவாதம் வருவதற்கான ஆபத்து 22 சதவீதம் குறைவாக இருப்பதாக ஒரு புதிய ஆய்வு தெரிவிக்கின்றது. இது மட்டுமல்லாமல், ஏட்ரியல் ஃபைப்ரிலேஷன் எனப்படும் இதய நோய்க்கான ஆபத்தும் இவர்களுக்கு 12 சதவீதம் குறைகிறது. மேலும் இதயத்திலிருந்து வரும் இரத்தக் கட்டிகளால் ஏற்படும் பக்கவாதத்திற்கான ஆபத்து 44 சதவீதம் குறைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகரிக்கும் வாய்வழி நோய்கள்

இன்றைய காலகட்டத்தில், மக்களிடையே வாய்வழி நோய்கள் வேகமாக அதிகரித்து வருகின்றன. பற்களை ஒழுங்காக பேணாததும், ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ளாததும் இதற்கு முக்கிய காரணமாக பார்ககப்படுகின்றது. இது கடுமையான உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 2022 ஆம் ஆண்டில் உலகில் 3.5 பில்லியன் மக்கள் பல் சொத்தை, ஈறு நோய் போன்ற வாய்வழி நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக உலகளாவிய சுகாதார அறிக்கை தெரிவிக்கின்றது. இப்போது இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கக்கூடும். 

வாய்வழி நோய்கள் நமது உடல் பாகங்களைப் பாதிக்கின்றன என்றும், அவற்றால் ஏற்படும் வீக்கம் இரத்த உறைவு அபாயத்தை அதிகரிக்கிறது என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர். ஆகையால், வாய்வழி ஆரோக்கியத்தின் ஆரோக்கியத்தையும், அதனால் இதயத்திற்கு ஏற்படும் பாதிப்புகளையும் நன்கு அறிந்து, வாய்வழி ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டியது மிக அவசியமாகும்.

(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | உடல் எடையை கட்டுப்படுத்தனுமா? இரவு உணவுக்கு பின் இதை செய்யுங்க!

மேலும் படிக்க | மறுபடியுமா... சீனாவில் மீண்டும் பரவும் புதிய வகை கொரோனா... அச்சத்தில் உலகம்... அறிகுறிகள் இவை தான்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News