குற்ற வழக்குகள் புலன் விசாரணைக்கு பொதுமக்கள் சாட்சிகளாக முன்வருவதில்லை எனவும், பொதுநலனில் ஆர்வம் கொண்ட சிலர் மட்டுமே சாட்சிகளாக வருவதாகவும் சென்னை உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.
Tamil Nadu CM MK Stalin on Human Rights: அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படையே மனித உரிமைகள் தான். பல்வேறு உரிமைகளை பற்றி அரசியல் அமைப்பு சட்டம் சொல்கிறது.
VK Sasikala: சசிகலாவிற்கு எதிரான செல்வ வரி வழக்கை கைவிடுவதாக வருமான வரித்துறை தெரிவித்ததை ஏற்றுக்கொண்ட சென்னை உயர் நீதிமன்றம், அவருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளது.
நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றும்படியான நீதிமன்ற உத்தரவை 10 நாட்களில் அமல்படுத்தாவிட்டால் தலைமைச்செயலாளரை நேரில் ஆஜராகும்படி உத்தரவிட நேரிடும்' என சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
Kallakurichi Student Death : கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்ன சேலம் பள்ளி மாணவி மரணம் தொடர்பாக அனைத்து கோணங்களிலும் விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ள தமிழக அரசு, அதுகுறித்த மூடி முத்திரையிட்ட அறிக்கையை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.
High Court Order: போக்குவரத்து கழகங்களுக்கு எதிரான வழக்குகளில் அவற்றின் வழக்கறிஞருக்கு உதவும் வகையில், ஒருங்கிணைப்பு அதிகாரியை நியமிக்க வேண்டுமென அனைத்து நிர்வாக இயக்குனர்களுக்கும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Kallakurichi Incident: நீதிமன்றம் உத்தரவிட்டும் இன்னும் மாணவியின் உடலை பெற்றோர் பெற்று கொள்ளவில்லை என தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளது.
AIADMK Headquarters சென்னை உச்சநீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து, இன்று அ.தி.மு.க. அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்றி சாவியை எடப்பாடி கே. பழனிசாமி தரப்பிடம் ஒப்படைத்தது வருவாய்த்துறை
AIADMK Headquarters Keys: அதிமுக அலுவலகம் சாவி எடப்பாடி பழனிசாமி வசம் சென்றது. ஓபிஎஸ்ஸிக்கு தொடரும் பின்னடைவு. இன்றைய தீர்ப்பின் சாராம்சம் என்ன என்பதை அறிந்துக்கொள்ளுங்கள்
சென்னை மெட்ரோ ரயிலின் நான்காம் வழித்தடம் அமைக்கும் திட்டத்தின் மூலம் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், பூந்தமல்லி வரதராஜ பெருமாள் கோவில் உள்பட ஏழு கோவில்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் விளக்கமளித்துள்ளது.
சென்னை ஐஐடி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பான வழக்கில் வேதியியல் துறை பேராசிரியர்கள் இருவர் முன்ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். இதே வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள மேற்கு வங்கத்தை சேர்ந்த கிங்சோவிற்கு வழங்கப்பட்ட முன்ஜாமீனை ரத்து செய்யக் கோரி காவல் துறையும் மனு தாக்கல் செய்துள்ளது.
சென்னை அயோத்யா மண்டபத்தை இந்து சமய அறநிலையத்துறைக்கு கீழ் கொண்டு வரப்பட்டதை உறுதி செய்த தனி நீதிபதி உத்தரவை எதிர்த்த மேல்முறையீட்டு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் எந்த தடையும் விதிக்கவில்லை.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.