உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட போவதாக தே.மு.தி.க., அறிவித்துள்ளது. மக்கள் நலக் கூட்டணியில் இருந்து அதிகாரப்பூர்வமாக தேமுதிக வெளியேறிவிட்டது.
உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிக தனித்தே போட்டியிடும் என்று அக்கட்சியின் பொருளாளர் ஏ.ஆர். இளங்கோவன் அறிவித்துள்ளார்.
வருத்தப்பட வேண்டாம், பயப்படவேண்டாம் பீனிக்ஸ் பறவையைப் போல மீண்டு வருவேன் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
காரைக்குடியில் நடைபெற்ற தேமுதிக பிரமுகர் இல்லத் திருமண விழாவில் அந்தக் கட்சியின் தலைவர் விஜயகாந்த், மகளிர் அணி தலைவி பிரேமலதா மற்றும் சுதீஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கடந்த மாதம் தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. தமது அணிக்கு வாக்கு சேகரிக்க தேமுதிக மகளிர் அணி தலைவர் பிரேமலதா விஜயகாந்த் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற பொதுக் கூட்டங்களில் கலந்துக்கொண்டு பேசி வந்தார்.
அப்போது அவர் திருப்பூரில் நடைபெற்ற ஒரு பொதுக் கூட்டத்தில் பேசுகையில், தமிழக முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் அமைச்சர் ஆனந்தன் என்பவர் புகார் தெரிவித்தார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. 134 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக் கொண்டுள்ளது. 98 இடங்கள் வென்ற தி.மு.க. எதிர் கட்சியாக செயல்படும்.
தி.மு.க. கூட்டணியில் தி.மு.க. 174 தொகுதிகளிலும், காங்கிரஸ் 41 தொகுதிகளிலும் மற்ற கட்சிகள் 19 தொகுதிகளிலும் போட்டியிட்டன. அ.தி.மு.க. 227 தொகுதிகளிலும் அதன் கூட்டணி கட்சிகளின் 7 வேட்பாளர்களும் இரட்டை இலை சின்னத்திலேயே போட்டியிட்டனர்.
நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் தேமுதிக படுதோல்வி அடைந்துள்ளது. தேமுதிக கட்சி மக்கள் நலக் கூட்டணியுடன் சேர்ந்து தேர்தலில் போட்டியிட்டது. ஆனால் இந்த கூட்டனி தமிகழத்தில் தேர்தல் நடந்த முடிந்த 232 தொகுதிகளில் ஒரு தொகுதி கூட வெல்லவில்லை.
முதலைமைச்சர் வேட்பாளராக ஊளுந்தூர்பேட்டையில் போட்டியிட்ட விஜயகாந்த் தோல்வியடைந்தார் மற்றும் 3வது இடத்திற்கு தள்ளப்பட்டார்.
வேலூர் மாவட்டத்தில் போட்டியிடும் தங்கள் வேட்பாளர்களை ஆதரித்து பிரேமலதா விஜயகாந்த் பிரச்சாரம் செய்தார். தேர்தல் குறித்து வெளியாகியுள்ள கருத்துக்கணிப்புகள் அனைத்துமே நாடகமானது. இந்த கருத்துக்கணிப்புகள் எல்லாம் மக்கள் மாற்றி எங்கள் கூட்டணி வெற்றி பெற செய்வார்கள்.
மதுரைவாயில் போட்டியிடும் சிபிஐ கூட்டணி கட்சி வேட்பாளர் ஜி பீம்ராவ் (எம்) ஆதரித்து விஜயகாந்த் பிரச்சாரம்.
ஒரு கருத்து கணிப்பு பற்றி பேரணியில் உரையாற்றிய தேமுதிக மக்கள் நலக் கூட்டணி முதலமைச்சர் வேட்பாளர் விஜயகாந்த் அவர்கள் கூறியது.
டிவி சேனல்கள் நடத்தும் கருத்துக் கணிப்புகள் உண்மை இல்லை. மக்கள் ஏமாறவேண்டாம் என்றும், இது வெறும் ஏமாற்று வேலை.
டிவி சேனல்கள் அதிமுக இல்லையான திமுக, திமுக இல்லையான அதிமுக என மாறி மாறி காட்டுவார்கள். இந்த இரண்டுமே ஊழல் கட்சிகள்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.