கீழடி அருங்காட்சியகத்தில் விதிமுறைகளை மீறி உள்ளே சென்று மாணவர்களை வெயிலில் காக்க வைத்த நடிகர்கள் சூர்யா, ஜோதிகா மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி பாஜக சார்பில் தென்மண்டல ஐஜியிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
தொண்டி அருகே நாரேந்தல் கிராமத்தில் 3 குடும்பங்களை ஊரை விட்டு தள்ளி வைத்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேர்த்துக் கொள்ள நீதிபதி உத்தரவு வழங்கியபோதும் அந்த உத்தரவை மீறி சேர்த்து கொள்ளாமல் இருந்து வரும் கிராம தலைவர் உட்பட நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட 3 குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே தனியார் முதியோர் கருணை இல்லத்தில் முதியோர்கள் துன்புறுத்தப்படுவதாக எழுந்த புகாரையடுத்து, 61 பேர் மருத்துவ பரிசோதனைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.