ஜம்மு -காஷ்மீர் மாநிலத்தின் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டு பகுதி அருகே, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாதிகளின் முகாம்கள் மீது இந்திய விமானப் படை அதிரடி தாக்குதலை தொடங்கியுள்ளது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில், மிரேஜ் 2000 ரக போர் விமானங்கள் மூலம், ஆயிரம் கிலோ வெடிகுண்டுகளை வீசி தீவிரவாத முகாம்களை இந்திய விமானப் படை அழித்துள்ளது!
புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இரவு 8 மணி முதல் 8.15 வரை பெட்ரோல் விநியோகம் நிறுத்தம்!
திருச்சி விமான நிலையத்துக்கு கொண்டுவரப்பட்ட தமிழக வீரர் சிவச்சந்திரன் உடலுக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேரில் சென்று வீர வணக்கம் செலுத்தினார்!
அனைத்து எதிர்கட்சிகளும் நாட்டு மக்களும் மத்திய அரசுக்கும் பாதுகாப்பு படைக்கும் உறுதுணையாக நிற்கிறோம் என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்!
புல்வாமா தாக்குதலுக்கு பின் தீவிரவாதிகள் மேல் மக்கள் கடும் கோபத்தில் உள்ளார்கள் ; உரிய பதிலடி கொடுக்க பாதுகாப்பு படைகளுக்கு முழு சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளதாக மோடி தெரிவித்துள்ளார்!
அஜ்மீர் தர்கா குண்டு வெடிப்பு வழக்கிலிருந்து சாத்வி பிரக்ஞா சிங் தாக்குர், ஆர்எஸ்எஸ் மூத்த தலைவர் இந்திரேஷ் குமார் உள்ளிட்ட 4 பேரை தேசிய புலனாய்வு அமைப்பு விடுவித்துள்ளது.
இதுதொடர்பான வழக்கு நடைபெற்று வரும் ஜெய்ப்பூர் சிறப்பு என்ஐஏ நீதிமன்றத்தில் இதற்கான அறிக்கையை அந்த அமைப்பு தாக்கல் செய்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.