டெல்லியின் வடக்கு மாநகராட்சி, தெற்கு மாநகராட்சி, கிழக்கு மாநகராட்சிகளுக்கும் கடந்த 23-ம் தேதி தேர்தல் நடைபெற்றது.
பா.ஜனதா, காங்கிரஸ், ஆம் ஆத்மி இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. வாக்குப்பதிவு முடிவடைந்த பிறகு நடத்தப்பட்ட கருத்து கணிப்புகளில் பா.ஜனதாவுக்கு அமோக வெற்றி கிடைக்கும் என்று கூறப்பட்டது.
இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. காலை நிலவரப்படி பா.ஜனதா அமோக வெற்றியை நோக்கி பயணம் செய்கிறது என தெரிகிறது. வாக்கு எண்ணிக்கையில் அதிக இடங்களில் முன்னிலை பெற்று முதலிடம் பிடித்து உள்ளது. இரண்டாவது இடத்திற்கு காங்கிரஸ், ஆம் ஆத்மி இடையே போட்டி நிலவுகிறது.
டெல்லியின் வடக்கு மாநகராட்சி, தெற்கு மாநகராட்சி, கிழக்கு மாநகராட்சிகளுக்கும் கடந்த 23-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. 54 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்ததாக தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.
மொத்த வார்டுகள் எண்ணிக்கை 272. இவற்றில் 2 வார்டுகளில் வாக்குப்பதிவு தள்ளி வைக்கப்பட்டுள்ளதால், 270 வார்டுகளில் மட்டும் வாக்குப்பதிவு நடைபெற்றது.
கோர்ட்டில் ஆஜராகாத டெல்லி முதல்வரான மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் கெஜ்ரிவாலுக்கு எதிராக ஜாமினில் வெளிவரக்கூடிய வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பிரதமரின் கல்வித்தகுதி குறித்து பல்வேறு சந்தேகங்களை எழுப்பிய கெஜ்ரிவால், நரேந்திர மோடி 12-ம் வகுப்பு வரை தான் படித்திருந்ததாகவும், அவர் வெளியிட்ட பட்டப்படிப்பு சான்றிதழ்கள் போலியானவை என டிவிட்டரில் செய்தி வெளியிட்டிருந்தார்.
இதனையடுத்து கெஜ்ரிவால் மீது பாஜக-வை சேர்ந்த கர்பி அங்லோங் என்பவர் கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் நேரில் ஆஜராகுமாறு கெஜ்ரிவாலுக்கு இரண்டு முறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை.
மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். தமிழகத்திற்கு உரிய வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும் என் பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி ஜந்தர்மந்தர் பகுதியில் தமிழக விவசாயிகள் கடந்த மாதம் 16-ந் தேதி முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இன்று தொடர்ந்து 24-வது நாளாக அவர்கள் போராடிவருகின்றனர். மத்திய அரசு எங்களது கோரிக்கைகளை ஏற்காமல் முக்காடு போட்டதால் நாங்கள் இன்று முக்காடு அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.
ஏப்ரல் மாதம் நடக்கும் டெல்லி மாநகராட்சி தேர்தலில் ஆம்.ஆத்மி. கட்சி வெற்றி பெற்றால் அடுத்த ஆண்டிற்குள் டெல்லி லண்டனை போல் மாறும் என டெல்லி முதல் அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
ஓட்டுக்கு பணம் கொடுத்தால் பணத்தை வாங்கிக்கொள்ளுங்கள் என்று மக்களிடம் அர்விந்த் கெஜ்ரிவால் கூறியதால், அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
டெல்லியில் சத் பூஜை என்ற பெயரில் அமைதியை சீர்குலைக்கும் வகையில் விதிமீறலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஆம் ஆத்மி கட்சியின் எம்.எல்.ஏ. ரீத்துராஜ் கோவிந்த் இன்று போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
டெல்லியில் அதிக அளவிற்கு காற்று மாசடைந்துள்ள நிலையில், தீபாவளிக்கு பிறகு டில்லியில் காற்றின் தரம் மிகவும் அபாய கட்டத்தை எட்டி உள்ளது. டெல்லியில் காற்று மாசு அதிகரிப்பால் 17 வருடங்களில் இல்லாத அளவுக்கு மோசமான கனரக பனிப்புகை நிலவுகிறது. இந்நிலையில் டில்லியில் அவசர அமைச்சரவை கூட்டத்திற்கு முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அழைப்பு விடுத்துள்ளார்.
டெல்லியில் அதிக அளவிற்கு காற்று மாசடைந்துள்ள நிலையில், தீபாவளிக்கு பிறகு டில்லியில் காற்றின் தரம் மிகவும் அபாய கட்டத்தை எட்டி உள்ளது. இந்நிலையில் டெல்லியில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் காற்று மாசைக் கட்டுப்படுத்தக் கோரி டெல்லிவாசிகள் போராட்டத்தில் ஏற்பட்டது. டெல்லியில் காற்று மாசு அதிகரிப்பால் 17 வருடங்களில் இல்லாத அளவுக்கு மோசமான கனரக பனிப்புகை நிலவுகிறது.
தீபாவளிக்கு பிறகு டில்லியில் காற்றின் தரம் மிகவும் அபாய கட்டத்தை எட்டி உள்ளது. இந்நிலையில் டில்லியில் அவசர அமைச்சரவை கூட்டத்திற்கு முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அழைப்பு விடுத்துள்ளார்.
குஜராத்தில் பாகிஸ்தான் ஹீரோக்கள் என்ற பேனர்களில் பயங்கரவாதிகள் பர்கான் வானி, ஹபீஸ் சயீத் மற்றும் ஒசாமா பின்லேடன் படத்துடன் டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலின் புகைப்படமும் இடம்பெற்று உள்ளது.
நேற்று இரவு 10 மணியளவில் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஆம் ஆத்மி கட்சியின் மறைந்த நிர்வாகி ஷங்கர் சவதாஸ் இல்லத்திற்கு சென்று ஆறுதல் கூறினார் அர்விந்த் கெஜ்ரிவால். ஆறுதல் கூறிவிட்டு வீட்டை விட்டு அவர் வெளியேறிய போது திடீரென ஒருவர் அவர் மீது மை வீசினார். மை வீசியாவரின் பெயர் தினேஷ் ஓஜா ஆகும்.
பின்னர் தினேஷ் ஓஜாவை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர் ஏவிபிவி அமைப்பை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. பரதீய ஜனதாவுடன் தொடர்புடைய அமைப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.
பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் பாரதீய ஜனதா அரசியல் செய்கிறது என்று அரவிந்த் கெஜ்ரிவால் கடுமையாக சாடினார்.
டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக விமர்சித்து வருபவர். பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்கள் மீதான இந்திய ராணுவத்தின் அதிரடி தாக்குதலுக்கு கூட அவர் ராணுவத்தை மட்டுமே பாராட்டி இருந்தார். இந்நிலையில், நேற்று அவர் முதல்முறையாக பிரதமர் மோடிக்கு பாராட்டு தெரிவித்தார்.
டெல்லி முதல்வரை மணிப்பூரின் இரும்புப் பெண் இரோம் ஷர்மிளா சந்தித்து பேசினார்.
மணிப்பூரின் இரும்புப் பெண் என வர்ணிக்கப்படும் இரோம் சர்மிளா 2000-ம் ஆண்டு முதல் மத்திய அரசின் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி தொடர் உண்ணாவிரதம் மேற்க்கொண்டார். அவரை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உயிர் வாழ வலுக்கட்டாயமாக குழாய் மூலம் மூக்கு வழியாக திரவ உணவு அளிக்கப்பட்டு வருகிறது. இதனால், அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அறையே சிறைச்சாலை போல் ஆகிவிட்டது.
டெல்லியின் முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் இன்று கார் விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
தற்போது அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் பஞ்சாப் மாநிலத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுயுள்ளார், கோல்டன் டெம்பல் என அழைக்கப்படும் சீக்கியர்களின் பொற்கோவில் அமைந்துள்ள அமிர்தசரஸ்க்கு காரில் சென்றார். அப்போது தன் காருக்கு முன்னால் சென்று கொண்டிருந்த பாதுகாப்பு வாகனத்தின் மீது அரவிந்த் கெஜ்ரிவால் வந்த இன்னோவா கார் வேகமாக மோதியது. சீட் பெல்ட் அணிருந்து இருந்ததால் அதிர்ஷ்டவசமாக அவருக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை.
பார்லிமென்ட் 21 செயலாளர்கள் நியமித்த விவகாரம் டில்லி ஐகோர்ட், நியமனத்தை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் அரசு பார்லிமென்ட்டில் 21 செயலாளர்களை நியமித்து. இந்த விவகாரம் எதிர்த்து டில்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த டில்லி ஐகோர்ட், 21 செயலாளர்களின் நியமனத்தை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
டெல்லியில் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி மந்திரிசபையில் சமூக நலத்துறை அமைச்சர் சந்தீப் குமார் பெண்களுடன் இருப்பது போன்ற வீடியோ வெளியானது. இச்சம்பவம் பெரும் சர்ச்சை மற்றும் பரபரப்பை ஏற்படுத்தியது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.