இந்தியா - இலங்கை அணிகள் மோதும் 2-வது சர்வதேச ஒருநாள் போட்டி பல்லெகலே ஸ்டேடியத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்து விளையாடியது.
இலங்கை அணியின் விக்கெட் கீப்பர் நீரோஷ் டிக்வெல்ல மற்றும் தனுஷ்க குணதிலக தொடக்க வீரர்களாக காலம் இறங்கினார்கள். இலங்கை அணி 41 ரன்கள் எடுத்த நிலையில் முதல் விக்கெட் விழுந்தது. நீரோஷ் டிக்வெல்ல 31(24) ரன்கள் எடுத்து ஜாஸ்ரிட் பும்ரா பந்தில் அவுட் ஆனார். 15.6 ஓவரில் இலங்கை 3 விக்கெட் இழப்புக்கு 81 ரன்கள் எடுத்தது. சீரான இடைவெளியில் இலங்கை விக்கெட் இழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக மிலிண்டா ஸ்ரீவர்தான 58 ரன்கள் எடுத்தார்.
இலங்கை சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது.
இன்று இந்தியா - இலங்கை அணிகள் இடையிலான 2_வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி பல்லேகலேவில் நடைபெறவுள்ளது. அதற்காக இந்திய அணி பயிற்சியில் ஈடுபட்டு வந்தது. அப்பொழுது இந்திய அணி கேப்டன் விராத் கோலி தனது உடம்பில் சட்டை இல்லாமல் பயிற்சியில் ஈடுபட்ட போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாக வருகிறது.
இலங்கைக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
இந்தியா - இலங்கை அணிகள் மோதும் 2-வது ஒருநாள் போட்டி, பல்லெகலே சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இன்று தொடங்குகிறது.
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, முதலில் நடந்த டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி சாதனை படைத்தது.
அடுத்து இரு அணிகளும் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரில் மோதுகின்றன. தம்புல்லாவில் நடந்த முதல் போட்டியில் இந்தியா 9 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்று முன்னிலை பெற்றது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.