கட்சி ஆரம்பித்தவர்கள் எல்லாம் எம்.ஜி.ஆர் ஆகிவிட முடியாது; யார் கட்சி ஆரம்பித்தாலும், ஓரிரு அம்மாவாசைகளுக்கு மட்டுமே தாங்குவர் என்று நாகையில் மாற்று கட்சியினர் 1500 க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்த நிகழ்ச்சியில் அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி பேச்ச.
நடிகர் ரஜினிகாந்தின் கருத்து குறித்த கேள்விக்கு நகைச்சுவையாகப் பேசியதைப் பகைச்சுவையாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்றும், தங்களது நட்பு தொடரும் என்றும் அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
வயதாகி, பல்லு போன நடிகர்கள் எல்லாம் இன்னும் நடிப்பதால்தான் இளைஞர்களுக்கு வாய்ப்பில்லாமல் போகிறது என அமைச்சர் துரைமுருகன், நடிகர் ரஜினிகாந்துக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
கோவில்களுக்காக பல திட்டங்களை முதல்வர் செயல்படுத்தி வருகிறார். நேற்று பழனியில் துவங்கிய அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு வெற்றி பெற்றுள்ளது - அமைச்சர் சேகர் பாபு!
தளபதி விஜய் தனது கட்சியின் கொடியை அறிமுகம் செய்து தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் பயணத்தை மும்முரமாக தொடங்கியுள்ளார். சினிமாவின் தளபதியாக விஜய்யும், அரசியலின் தளபதியாக மு.க.ஸ்டாலினும் இருந்த நிலையில், அரசியலில் விஜய் வந்ததால், இனி தளபதி யார் என்று நெட்டிசன்கள் சர்ச்சையை கிளப்பியுள்ளனர். இதுகுறித்த சுவாரஸ்ய தொகுப்பை காணலாம்.
மத்திய நிதி நிலை அறிக்கையில் தமிழகத்திற்கான பெருமளவு நிதி நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் மத்திய அரசுடன் என்ன நெருக்கம் இருக்கிறது என திமுக எம்.பி. கனிமொழி எதிர்க்கட்சிகளுக்கு கேள்வி எழுப்பினார்.
புரட்சித்தலைவர் கட்சி காலை முதல் இரவு வரை என்னை வசைபாடுவதை பெருமையாக நினைப்பதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மரியாதை செலுத்தியதால் கள்ள உறவு என சொல்வது பக்குவப் பட்ட அரசியல்வாதி சொல்லும் வார்த்தையா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
கலைஞர் 100 ரூபாய் நாணயத்தை 10,000 ரூபாய் கொடுத்து வாங்கி கொள்ளலாம். அதற்கு மதிப்பு இல்லை, இருப்பினும் நீங்கள் பத்தாயிரம் கொடுத்து அந்த நாணயங்களை வாங்கிச் செல்லலாம் என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.
தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி உருவம் பொறித்த நூற்றாண்டு நினைவு நாணயத்தை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட, மு.க.ஸ்டாலின் பெற்றுக்கொண்டார்.
திமுகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் நடந்தது. திமுகவின் தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் (MK Stalin) தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடந்தது.
யூடியூபர் சவுக்கு சங்கருக்கு எதிரான 16 வழக்குகளின் விசாரணைக்கும், அவர் மீது நடவடிக்கை எடுக்கவும் இடைக்காலத் தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
Senthil Balaji : சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீது உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது. இதில் அவருக்கு ஜாமீன் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் திமுக இருக்கிறது.
அதிமுக ஆட்சியில் கோவை உயர்மட்டப் பாலம் கொண்டுவரப்பட்டது என்ற முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் கருத்துக்குப் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு பதிலடி கொடுத்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.